Advertisement

Responsive Advertisement

ரோஹித், திராவிட் தலைமைக்கு முதல் வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி: ஹர்ஸல், அஸ்வின் கட்டுக்கோப்பு


கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் அரைசதம், ஹர்ஸல் படேல், அஸ்வின் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் ராஞ்சி்யில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்ெகட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments