Advertisement

Responsive Advertisement

காமராசர் பல்கலை. வரலாற்றில் முதன்முறை - உலக ‘டேக்வாண்டோ’ போட்டியில் திண்டுக்கல் மாணவி தேர்வு

மதுரை: சீனாவில் நடக்கும் உலக டோக்வாண்டோ போட்டியில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி மாணவி பங்கேற்கிறார். காமராசர் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக அவர் பங்கேற்பது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இவ்வாண்டுக்கான உலக போட்டிகள் சீனாவில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 8 வரையிலும் நடக்கிறது. இதையொட்டி, இப்போட்டியில் பங்கேற்கும் விதமாக பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு நடந்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ‘டேக்வாண்டோ’ போட்டிக்கான தேர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில், திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் எம்எஸ்டபிள்யூ படிக்கும் சேலம் மாணவி அனுசியா பிரிதர்ஷினி பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments