Advertisement

Responsive Advertisement

2024 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டேவிட் வார்னர்

லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். தனது சொந்த ஊரான சிட்னியில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் ஜனவரியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவர் ஓய்வு பெறுகிறார்.

வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அவர் தயாராகி வருகிறார். இந்திய அணிக்கு எதிரார் இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும் வார்னர் விளையாட உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments