Advertisement

Responsive Advertisement

IPL 2023 | பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்: முதல் சுற்றோடு வெளியேறிய ஹைதராபாத்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 62-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. கடந்த சீசனில் குஜராத் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில், 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு வீரரான சாய் சுதர்சன், 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments