Advertisement

Responsive Advertisement

IPL 2023 | நடு ஓவர்களில் பந்துகளை வீணடித்ததே தோல்விக்கு காரணம்: சிஎஸ்கே கேப்டன் தோனி வருத்தம்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இந்த தோல்விக்கு நடு ஓவர்களில் பந்துகளை வீணடித்ததே காரணம் என அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 176 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் எம்.எஸ்.தோனி 17 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய போதிலும் கடைசி பந்தில் வெற்றிக்கான சிக்ஸரை அவரால் அடிக்க முடியாமல் போனது. இந்த ஆட்டத்தின் விதியை 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையிலான காலகட்டம்தான் தீர்மானித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments