Advertisement

Responsive Advertisement

ராஜஸ்தானை துவம்சம் செய்த மும்பை: சூர்யகுமார், டிம் டேவிட் அபாரம்!

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் 213 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி, வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை. சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் என இருவரும் தங்கள் அதிரடியால் மும்பைக்கு இந்த வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்தப் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு தொடக்கமே சறுக்கல்தான். கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேமரூன் க்ரீன், இஷான் கிஷன் உடன் இணைந்து 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். கிஷன், 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். க்ரீன், 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments