Advertisement

Responsive Advertisement

ஆழ்வார்பேட்டை டு ஐபிஎல்... பாராட்டுகளை குவிக்கும் சாய் சுதர்ஷன் யார்?

"சாய் சுதர்ஷன் பயங்கரமாக பேட்டிங் செய்கிறார். இதற்காக அவரையும், அவருக்கு உதவி செய்த பயிற்சியாளர்களையும் பாராட்டியாக வேண்டும். கடந்த 15 நாட்களாக அவர் பேட்டிங் செய்த விதமும், அவரது கடின உழைப்பையும்தான் தற்போது நீங்கள் முடிவுகளாக பார்க்கிறீர்கள். எனது கணிப்பு தப்பாக இல்லை என்றால் எப்படியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அப்படியே அது இந்திய அளவிலும் செல்லலாம்" - குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

“சாய் சுதர்ஷனிடம் கடந்த போட்டியில் பார்த்தது அவருடைய தன்னம்பிக்கையை. கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு சில போட்டிகளிலேயே விளையாடியுள்ளார். கிடைத்த சில வாய்ப்புகளில் 30+ ரன்களும் அடித்துள்ளார். ஆனால் இந்த வருடம் முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோதே அவரிடம் தன்னம்பிக்கை இருந்தது. குறிப்பாக முதல் பந்திலிருந்தே தான் நினைக்கும் இடத்தில் அவரால் அடிக்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments