Advertisement

Responsive Advertisement

WPL | 5 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவிய ஆர்சிபி: கடைசி ஓவரில் டெல்லி வெற்றி

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நடப்பு சீசனின் 11-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி.

டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. எல்லிஸ் பெர்ரி, 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ரிச்சா கோஷ், 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments