Advertisement

Responsive Advertisement

இந்தூர் போட்டியில் எளிதான வெற்றி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. தகுதி

இந்தூர்: இந்தியாவுக்கு 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், ஆஸ்திரேலியா 197 ரன்களும் எடுத்தன. 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது நேதன் லயனின் அபாரமான சுழற்பந்து வீச்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா 59, ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள் சேர்த்தனர். நேதன் லயன் 8 விக்கெட்கள் வீழ்த்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments