Advertisement

Responsive Advertisement

SA20 | கேபிடல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற SA20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. இறுதிப் போட்டியில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை 22 பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் அணி.

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் SA20 என்ற ஃப்ரான்சைஸ் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்தது. இந்த லீக் தொடரில் பங்கேற்று விளையாடிய ஆறு அணிகளையும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியிருந்தன. கிரிக்கெட் களத்தில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும். அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதில் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் துவங்கப்பட காரணமாக அமைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments