Advertisement

Responsive Advertisement

இந்திய அணியின் புதிய ரன் இயந்திரம் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லின் திறமை சந்தேகத்திற்கு இடமில்லாதது, ஆனால் அவரது முதல் டி 20 கிரிக்கெட் சதமானது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரன் இயந்திரமாக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 63 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 126 ரன்களை வேட்டையாடினார். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லின் முதல் சதமாக இது அமைந்திருந்தது. அதிலும் தனது 6-வது ஆட்டத்திலேயே சதம் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments