Advertisement

Responsive Advertisement

ஆஸ்திரேலியாவுடன் 3-வது டெஸ்டில் இன்று மோதல் - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய அணி

இந்தூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் 3-வது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments