Advertisement

Responsive Advertisement

2014-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கான நிதி 3 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: 2014-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் மெகா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அவர் கூறும்போது,“2014-ம் ஆண்டுக்கு முன்னர் விளையாட்டு அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.800 முதல் ரூ.850 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விளையாட்டு வசதிகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘கேலோ இந்தியா' திட்டத்துக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments