Advertisement

Responsive Advertisement

ஒடிசாவில் காணாமல்போன மகளிர் கிரிக்கெட் வீராங்கனை - இரு நாட்களுக்கு பின் வனத்தில் சடலமாக மீட்பு

கட்டாக்: ஒடிசாவில் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain) வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain). பூரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக பஜ்ரகபட்டி சென்றிருந்தார். மொத்தம் 25 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த முகாமில் இருந்து புதுச்சேரி செல்லும் அணியின் இறுதிப்பட்டியலில் ராஜஸ்ரீ இடம்பெறவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments