Advertisement

Responsive Advertisement

சாதிக்குமா ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி? - இலங்கையுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்

மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா, இலங்கை அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை சந்திக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணி நிர்வாகம் அதிக முன்னுரிமை வழங்காது என்றே கருதப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments