Advertisement

Responsive Advertisement

ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது சவுதி அரேபியா கிளப்

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சவுதி அரேபியாவில் புதிய கால்பந்து லீக்கில் விளையாட உள்ளேன். அல் நசர் கிளப்பின்தொலைநோக்கு பார்வையும், செயலும் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. இந்த கிளப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி மிகப்பெரிய வெற்றியை அடைய உதவ முடியும்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments