Advertisement

Responsive Advertisement

FIFA WC 2022 | முத்தான நான்கு கோல்: கனடாவை வீழ்த்தியது குரோஷியா

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது குரோஷியா. இந்த வெற்றியின் மூலம் ‘எஃப்’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது அந்த அணி. இந்த போட்டி தொடங்கிய 120 நொடிகளுக்குள் முதல் கோலை பதிவு செய்தது கனடா. ஆனால் நேர்த்தியாக விளையாடி ஆட்டத்தை வென்றது லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியா.

குரூப் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்தது. நெருக்கடியான இந்த போட்டியில் பதட்டமின்றி கிளாஸ் ஆக விளையாடி அசத்தி இருந்தது குரோஷியா. ஷாட் ஆடுவதிலும், அதனை டார்கெட்டில் அடிப்பதுமாக அசத்தினர் குரோஷிய வீரர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments