Advertisement

Responsive Advertisement

ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் | நாங்கள் மிகவும் ஆபத்தான அணி - சொல்கிறார் இங்கி. கேப்டன் பட்லர்

பெர்த்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் இன்று மாலை 4.30 மணிக்கு பெர்த் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஜூன் மாதம் இயன் மோர்கன், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வென்றது. இந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை வேட்டையாடினர். அதேபோன்று மீண்டும் ஒரு முறை ரன் வேட்டைக்காக தயாராக உள்ளனர் 2010-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணியினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments