Advertisement

Responsive Advertisement

வெற்றிக்கு பிறகு கோலி-பேர்ஸ்டோ போட்டோவை பகிர்ந்து வஞ்சப்புகழ்ச்சி செய்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பாஸ்டன்: ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு கோலி-பேர்ஸ்டோ போட்டோவை பகிர்ந்து வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிர்வாகம்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் விளையாடிய எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற டெஸ்ட் தொடர் 2 - 2 என சமனில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது அந்த அணி வீரர் பேர்ஸ்டோவிடம் காரசாரமான வார்த்தை போரில் (ஸ்லெட்ஜிங்) ஈடுபட்டார் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. நியூசிலாந்து அணி வீரர் சவுதி பந்துவீச்சை ஒப்பிட்டு பேர்ஸ்டோவை வம்புக்கு இழுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அமைதியாக பேட் செய்யும் படியும் சொல்லி இருந்தார். அந்த தருணம் ஆட்டத்தில் அனல் பறந்தது. அப்போது 61 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார் பேர்ஸ்டோ. ஸ்லெட்ஜிங்கிற்கு பிறகு பேர்ஸ்டோ சதம் அடித்து அசத்தினார். இறுதியில் பேர்ஸ்டோவை கேட்ச் பிடித்து வெளியேற்றியது கோலி தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments