Advertisement

Responsive Advertisement

2023 உலகக் கோப்பை | இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை நிறுவும் பணியில் ஒடிசா

2023 ஹாக்கி உலகக் கோப்பையை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறது ஒடிசா. கடந்த 2018-இல் ஹாக்கி உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது ஒடிசா.

அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் கோப்பை தொடர் சற்று தள்ளிப்போயுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments