Advertisement

Responsive Advertisement

ஃபார்மில் உள்ள ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுக்கப்படுவது ஏன்? விஹாரி ப்ளேயிங் லெவனில் தேர்வாகக் காரணமென்ன?

ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் கோலிக்கு பதிலாக ஆட வேண்டிய ஸ்ரேயாஸ் அய்யரும் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி ப்ளேயிங் லெவனுக்குள் வந்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரை சதம் அடித்து ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். நேற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், இன்று காலையில்கூட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டாஸ் போடப்படும் முன் கடைசி நேரத்தில் வயிற்றுக்கோளாறு எனக் கூறி ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments