Advertisement

Responsive Advertisement

அகமபாதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன்? - பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடத்த திட்டம் 

புதுடெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க அகமதாபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் ஏலத்தையும் பெங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் சற்று புதுவிதமானது. வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை தலைமையாக வைத்து இரு அணிகள் வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிதாக இடம்பெறும் இரு அணிகளும் 3 வீரர்களைத் தக்கவைக்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments