Advertisement

Responsive Advertisement

ரஹானே, புஜாரா இடத்துக்கு ஆபத்து? சில கடினமான முடிவுகளை எடுக்க இருக்கிறோம்: ராகுல் திராவிட் சூசகம்

அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்கலாம். அப்போது, வீரர்களுடன் தெளிவான தகவல்தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார்.

தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை, 2-வது டெஸ்ட்டில் விளையாடினார். புஜாரா, ரஹானே இருவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் நீக்கப்படலாம் என்பதை திராவிட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments