Advertisement

Responsive Advertisement

உலக பாட்மிண்டன் கால் இறுதியில் சிந்து

மாட்ரிட்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்பெயினின் ஹூல்வா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 10- வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவோங்கை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-18 என்ற நேர் செட்டில் வென்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் இரட்டையரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பன் கிடிதரகுல், ரவிந்த பிரஜோங்ஜாய் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments