Advertisement

Responsive Advertisement

பிஎஸ்பிபி கேரம் விளையாட்டு போட்டிகள்: ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் (பிஎஸ்பிபி) 28-வது பதிப்பு கேரம் விளையாட்டு தொடர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.

இதில் நாடுமுழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஓஎன்ஜிசி வீராங்கனைராஷ்மி குமாரி முதலிடம் பிடித்தார். துபா சாஹர் 2-வது இடத்தையும் (ஐஒசிஎல்), காஜல் குமாரி (ஐஒசிஎல்) 3-ம் இடத்தையும் பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments