Advertisement

Responsive Advertisement

இனி மூன்றாம் பாலினத்தவரும் ஒலிம்பிக்ஸில்...

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய அறிவிப்பின்படி இனி மூன்றாம் பாலினத்தவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வாய்பு உருவாகியுள்ளது. அதாவது மூன்றாம் பாலினத்தவர் ஒலிம்பிக்ஸில் பங்கு பெறுவதை அந்தக் குழு இனி தடைசெய்யாது. பல்வேறு விளையாட்டுகளுக்கான கூட்டமைப்புகள் தனித்தனியாக இதுதொடர்பாக தீர்மானிக்கலாம். முக்கியமாக மகளிர் பிரிவில் திருநங்கைகள் போட்டியிட்டால் அது அவர்களுக்கு அதிகப்படியான சாதக நிலையைத் தருமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அந்தந்த கூட்டமைப்புக்கு மாற்றப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மருத்துவ இயக்குநர் ரிச்சர்ட் பட்ஜெட் (மகளிர்), ‘போட்டிகளில் இனி யார் கலந்து கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க டெஸ்டோஸ்டிரோன் அளவை அறிய வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனினும் இந்த அறிவிப்பு ஒரு வழிகாட்டுதல்தான், சட்டம் அல்ல’ என்று கூறியிருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments