Advertisement

Responsive Advertisement

இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடத் தடை : ஹலால் செய்யப்பட்ட மாமிசத்துக்கு மட்டுமே அனுமதி


இந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி வழங்கப்படாது, ஹலால் செய்யப்பட்ட மாமிசத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பிசிசிஐ வீரர்களுக்கு வெளியிட்ட உணவுக்குறி்ப்பில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments