Advertisement

Responsive Advertisement

நன்றி, மகிழ்ச்சி; இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பதிவு

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப் பின் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “நன்றி, மகிழ்ச்சி என இரு வார்த்தைகளால் மட்டுமே என்னை இப்போது வரையறுக்க முடியும்’’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments