Advertisement

Responsive Advertisement

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் துபாயில் இன்று தொடக்கம்: சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதல்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட்தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments