Advertisement

Responsive Advertisement

பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற என்னுடைய சிறிய கனவு நனவானது: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மகிழ்ச்சி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்று தனது கனவை நனவாக்கியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம்வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், 23 வயதானநீரஜ் சோப்ரா தனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். அதில், “எனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய சிறிய கனவு நனவானது” எனத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments