Advertisement

Responsive Advertisement

கோலி அணியின் உண்மையான சொத்து; எதிர்கால செயல்திட்டத்தை வைத்தே முடிவு: சவுரவ் கங்குலி கருத்து


கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் “ டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். 3 பிரிவுகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்று கடந்த 9 ஆண்டுகளாக எனக்கிருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறேன். தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வழிநடத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments